*டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? *ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! *தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? *டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?☺ *டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? *என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? *படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! *காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? *குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே! *இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! *டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! *இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! *சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே! *சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்! *மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா ????? JAYASALA 42